search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம ஊழியர்"

    28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் படி ரூ.2,500 நிறுத்தியதை கண்டிப்பது, சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கு பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 7-ந் தேதி தாலுக்கா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்திலும், 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு போராட்டத்திலும், 28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×